26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
nada1
Other News

மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு உயிரிழந்த சோகம்!!

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்த ஒரு மாதத்திலேயே கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் யுவ சங்கர் (22). அதே பகுதியை சேர்ந்தவர் நவீனா (21). இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

 

 

இதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி இருவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளங்காடு அருகே உள்ள பாலேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் இருவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக, தங்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது முயல் பண்ணை அருகே உள்ள கிணற்றில் யுவசங்கர் தவறி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நபினா, முயல் பண்ணை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 

சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் யுவசங்கரின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல்

nathan

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தால் குதூகலிக்க உள்ள ராசிகள்

nathan

பாக்யலக்ஷ்மி இனியா பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

nathan

மணிப்பூர் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஹீரோதாஸ் கைது!

nathan

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர்

nathan

பிறந்தநாள் அன்று நடந்த சோதனை..புலம்பி தீர்க்கும் மணிமேகலை….

nathan

பாடகராக அறிமுகமாகிய சந்தானம்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களுக்கு ‘இது’ தான் முக்கியமாம்…

nathan