g%25C3%25BCzellik i%25C3%25A7in sa%25C4%259Fl%25C4%25B1kl%25C4%25B1
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு வைத்தியம்

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
g%25C3%25BCzellik i%25C3%25A7in sa%25C4%259Fl%25C4%25B1kl%25C4%25B1

Related posts

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில அற்புத வழிகள்!

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இதை மட்டும் செய்ங்க !! தலைமுடி மற்றும் தாடி மீசை நரைத்துவிட்டதா ??

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச்செய்யும் கறிவேப்பிலை

nathan

முடி அடர்த்தியாக வளர

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan