சிற்றுண்டி வகைகள்

சூடான மசாலா வடை

தேவையான பொருட்கள்:

* கடலை பருப்பு – 1/2 கப்

* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு…

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 4 பல்

* வரமிளகாய் – 4

* இஞ்சி – 1/2 இன்ச்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]masalavada

செய்முறை:

* முதலில் கடலைப்பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து, அத்துடன் பாதி கடலைப்பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மீதமுள்ள கடலைப் பருப்பு, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா வடை தயார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button