முகப் பராமரிப்பு

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா?

கோடையில், பலருக்கு வியர்வை அதிகமாக இருக்கும், அவர்களின் முகம் எப்போதும் ஒட்டும். உங்கள் முகம் எப்பொழுதும் எண்ணெய் பசையாக இருந்தால், உங்கள் முகம் அசிங்கமாகவும் கருமையாகவும் இருக்கும்.மேலும், உங்கள் முகம் எண்ணெய் பசையாக இருந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் உங்கள் முகத்தில் தோன்றும். சிலர் எண்ணெய் பசை சருமத்துடன் பிறக்கிறார்கள். உங்கள் முகம் எண்ணெய் பசையாக இருந்தால், அதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

பலர் தங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற சோப்பு அல்லது க்ளென்சர் மூலம் முகத்தை கழுவுகிறார்கள். ஆனால் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள சரும சருமத்தைப் போக்குவதற்குப் பதிலாக, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் அதைப் போக்கலாம்.

தயிர்
உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் தயிரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் தயிர் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதற்கு தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள், ஓட்ஸ் மற்றும கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்து நன்கு கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மஞ்சள்

முகத்தில் அதிக எண்ணெய் பசையைக் கொண்டவர்கள், ஒரு பௌலில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம்.

எலுமிச்சை

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படும்.

கோதுமை மாவு

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கோதுமை மாவில், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசையைக கட்டுப்படுத்தலாம்.

தக்காளி

தக்காளியில் எண்ணெயை உறிஞ்சும் அமிலம் உள்ளதால், இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. அதற்கு தக்காளியை வெட்டி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button