ht3866
கர்ப்பிணி பெண்களுக்கு

தொப்புள் கொடி 3 நிமிடங்கள் முக்கியம்!

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டிவிடுவது உலகெங்கிலும் இருக்கும் வழக்கம்தான். ‘தொப்புள் கொடி வெட்டப்படும் இந்த நேரத்தை 3 நிமிடங்களுக்காவது நீட்டிப்பது நல்லது’ என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஸ்வீடனில் 263 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த வியப்பூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. பிறந்தவுடன் தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும், 3 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து கூடுதலாக ரத்தப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது.

குழந்தைகளுக்கு 4 வயதானபோது ஆய்வாளர்கள் அவர்களைக் கவனித்தார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகள் போதுமான இரும்புச்சத்துடனும் நல்ல மூளை வளர்ச்சியுடனும் ஆரோக்கியமாக இருந்தார்கள். இவர்களுக்கு, நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்படுவதையும், சமூகத்தில் பழகும் திறன் மேம்பட்டு இருப்பதையும் JAMA Pediatrics என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார நிறுவனம், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது காத்திருந்து தொப்புள் கொடியை
வெட்டுமாறு பரிந்துரைத்துள்ளது.

ht3866

Related posts

பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு

nathan

கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?

nathan

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இதுவரை வெளிவராத டெலிவரி அக்கிரமங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!!

nathan

கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கருப்பையில் பனிக்குடம் எதனால் உடைகின்றது.?!

nathan

தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி

nathan