30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திருச்சி அருகே மாணவனுடன் மாயமான டீச்சரை மடக்கி பிடித்த போலீசார்

திருச்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பில் பயின்ற மாணவருடன் ஓட்டம் பிடித்தார் அவர்களை மடக்கி பிடித்த போலீசார் ஆசிரியையை போக்சோவில் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தனியார் பள்ளியை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்,

அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரைச் சேர்ந்த மாணவனும் கடந்த 5-ம் தேதி முதல் காணவில்லை. மாணவனின் பெற்றோர் மாணவனை வலைவிரித்து தேடியுள்ளனர்.

 

ஆனால் மாணவன் எங்கும் தேடி கிடைக்காததால் கடந்த 11-ந் தேதி போலீசில் புகார் செய்தனர். அவர்கள் அளித்த புகாரில் தனது மகனை காணவில்லை என்றும் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சர்மிளா மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர்.

புகாரின் அடிப்படையில் மாணவனை போலீசார் முழுவீச்சில் தேடி வந்தனர்.ஆசிரியையின் செல்போனை டிரேஸ் செய்தனர்.

அப்போது இருவரும் திருவாரூர்,தஞ்சாவூர்,திருச்சி என சுற்றியுள்ளனர்.கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதுாரில் உள்ள ஆசிரியையின் தோழி வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர் மைனர் என்பதால் மாணவனை காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார்,ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related posts

7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி : இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்!!

nathan

சந்திரயான்-3 தரை இறங்கிய இடமான ‘சிவசக்தி’ பெயருக்கு விண்வெளி யூனியன் அங்கீகாரம்

nathan

வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம்-ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன்

nathan

அடேங்கப்பா! குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

nathan

கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி..!

nathan

பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..!சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவா இது

nathan

நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா..

nathan

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்

nathan