35.5 C
Chennai
Saturday, May 31, 2025
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆட்டம் போடும் சமந்தா..!

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

4 ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை யோகம்

nathan

பிரசவ வலி அறிகுறிகள் – delivery pain symptoms in tamil

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க காலேஜ் லவ்வரையே கல்யாணம் பண்ணிக்கும் அதிர்ஷ்டமிருக்காம்..

nathan

இதை நீங்களே பாருங்க.! 50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

nathan

வானில் பறந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

nathan

அம்பலமான உண்மை!தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாகும் தமிழர்கள்?

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

nathan