25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

5-ம் தேதி பிறந்தவங்க காதல் திருமணம் செய்வார்களாம்

nathan

கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

nathan

இதை நீங்களே பாருங்க.! 50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

nathan

லவ் டுடே பட நாயகி சுவலட்சுமியை ஞாபகம் இருக்கா?

nathan

படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் இதை செய்வார்கள்.. அஞ்சலி..!

nathan

சிம்மத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்

nathan

ராகு கிடுக்குப்புடி .. முரட்டு அடி 3 ராசிகளுக்கு தான்

nathan

சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?

nathan

பிரதமர் மோடி புகழாரம் – சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்’

nathan