முகப் பராமரிப்பு

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தி பலன்களை பெற்று கொள்ளுங்கள்.

முல்தானி மிட்டி
ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பொடியை எடுத்து அதில் சிறிது வேப்பம்பூ, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து மென்மையான பேஸ்டாக உருவாக்கவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 நிமிடம் காய விட்டு, பிறகு முகத்தை கழுவவும்.

 

கடல் உப்பு
கடல் உப்பு மற்றும் தேன் கூட உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரைவில் நீக்க உதவும். இதற்கு கடல் உப்பில் சிறிது தேன் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.

பேக்கிங் சோடா
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பேஸ்ட்டை கலக்கவும். அதன் பிறகு, கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி காய விடவும்.

பின்னர் சிறிது தண்ணீர் தடவி, லேசான கைகளால் மசாஜ் செய்து, பிறகு கழுவவும்.

 

மஞ்சள்
மஞ்சளைக் கொண்டும் கரும்புள்ளிகளை நீக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். லேசான கைகளால் மசாஜ் செய்து பின்னர் வெற்று நீரில் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை
கரும்புள்ளிகளை நீக்க, ஒரு தேக்கரண்டி தேனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த பேஸ்ட்டை கரும்புள்ளி உள்ள பகுதியில் தடவி சுமார் 20 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முகத்தை கழுவவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button