36.7 C
Chennai
Thursday, May 30, 2024
herbal tea 02 1449058195
சிற்றுண்டி வகைகள்

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ

மழை பெய்யும் போது சூடாக ஏதேனும் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், மிகவும் சுவையாகவும், ஆரோக்கியத்தை வழங்கும் மூலிகைத் தேநீர் செய்து குடியுங்கள். இதனால் உங்களுக்கு ஜலதோஷம், இருமல் போன்றவை இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். மூலிகைத் தேநீர் என்றதும் என்ன மூலிகை பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்.

வீட்டில் உள்ள இஞ்சி, எலுமிச்சை, தேன் கொண்டு தான் தயாரிக்கப் போகிறோம். இந்த தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சியும் வழங்கும். சரி, இப்போது அந்த மூலிகை தேநீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!


herbal tea 02 1449058195
தேவையான பொருட்கள்:

இஞ்சி – 1 இன்ச்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்து, இஞ்சியில் உள்ள சாறு நீரில் இறங்கியதும், அதனை இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ ரெடி!!!

Related posts

சூப்பரான மங்களூர் பன் ரெசிபி

nathan

பேபி கார்ன் பஜ்ஜி

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

nathan

மட்டன் போண்டா

nathan

கைமா இட்லி

nathan

பிள்ளையார்பட்டி மோதகம்:

nathan

சிவப்பு அவல் புட்டு

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan