Husband wife 1
அழகு குறிப்புகள்

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

சிறுகனூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள குமுளூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). இவரது மனைவி மீனா (40). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஏழ்மையில் இருந்த பாலசுப்பிரமணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012-ம் ஆண்டு மலேசியா சென்று அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை தனது மனைவி மீனாவிற்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கனகாம்பாள் (35) என்பவருக்கும் மீனாவிற்கும் நட்பு ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி கனகாம்பாள் சகோதரர் சுரேஷ் (வயது 32) (இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்) மீனாவுடன் நட்பாக பேசி வந்துள்ளார். பின்னர், நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இந்நிலையில், சுரேஷ் வெளிநாடு செல்ல வேண்டும் என்று மீனாவிடம் கூறி அதற்காக ரூ.2 லட்சம் வரை பெற்று மலேசியா சென்று அங்கு எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சுரேஷ் -மீனா கள்ளத்தொடர்பு சுரேஷின் பெற்றோருக்கு தெரியவர கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் தாய் ராமாயி (60), சுரேஷின் மனைவி முத்துலட்சுமி (27), சகோதரி, கனகாம்பாள் (35) ஆகியோர் மீனா வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தையால் அவரை திட்டி, அவமானப்படுத்தி அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மீனா அப்போதே சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிறுகனூர் போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறிவிட்டதாக தெரிகிறது. நடந்த சம்பவங்கள் குறித்து மலேசியாவில் இருக்கும் தனது கள்ளக்காதலன் சுரேஷிடம் மீனா செல்போனில் கூறி மனவேதனை அடைந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த மாதம் 20-ந் தேதி மீனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து குமுளூர் கிராமத்திற்கு வந்த பாலசுப்பிரமணி தனது மனைவிக்கு ஏற்பட்ட அவமானங்களை அறிந்து தனது மனைவியின் சாவுக்கு சுரேஷின் தாய், அவரது மனைவி, அவரது சகோதரி தான் காரணம் என்று எழுத்துப்பூர்வமாக கடந்த 14-ந் தேதி லால்குடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிறுகனூர் போலீசார் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷின் தாய், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi

Related posts

மஞ்சளின் முழு பலனையும் பெற வேண்டுமானால் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை

nathan

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

கண்களுக்கு ரோஸ் வாட்டர் தரும் புத்துணர்ச்சி

nathan

இப்படி தினமும் செய்து வாருங்கள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!

sangika