27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
5
மருத்துவ குறிப்பு

சேற்றுப்புண் குணமாக…!

சேற்றுப்புண் குணமாக…
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
அம்மான் பச்சரிசி இலையை வெறுமனே அரைத்துப் பூசலாம்.
மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.
மேற்சொன்ன நான்கில் ஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.

தலைவலி, சளி: விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால்… மூக்கடைப்பு, நாசி ஒழுகுதல், தலைவலி போன்றவை சரியாகும். தும்பை இலைச்சாற்றை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் தேங்கியிருக்கும் நீர், கபால நீர், மண்டைக்குத்தல், மண்டையிடி போன்றவை குணமாகும். தும்பை இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் சளி விலகும். 20 தும்பைப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால்… தலைபாரம், ஜலதோஷம் போன்றவை சரியாகும்.

மெட்ராஸ் ஐ: மஞ்சள்பொடியை நீரில் கலந்து மெல்லிய பருத்தித் துணியில் நனைத்து நிழலில் காயவைத்து கண்களை துடைத்து வருவதன் மூலம் `மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் வலி, கண் சிவத்தல் போன்றவை சரியாகும்.

சொறி, படை: மஞ்சளுடன் வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்துப் பசையாகக் குழைத்து பூசி வந்தால்… சொறி, அரிப்பு, படை மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
5

Related posts

இந்த ஒரு எண்ணெய் போதும்..வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா?

nathan

பரவும் பன்றிக்காய்ச்சல்… தொடரும் பதற்றம்… தீர்வு என்ன?

nathan

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் மாசிக்காய்.

nathan

கண் நோய்க்கான சித்த மருந்துகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!

nathan

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறா?

nathan

வலிப்பு நோய் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

nathan

மருத்துவ குணம் ஏராளம் கொண்ட துளசி! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களின் அதிக உதிர்போக்கை சரி செய்திடும் -சித்த மருந்துகள்

nathan