32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

பேஷியல் என்பது என்ன?

பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.

பேஷியல் செய்யும் முறை எப்படி?

பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.

பேஷியலில் உள்ள வகைகள் என்னென்ன?

பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு அதில் வகைகள் உள்ளன.
எந்த சருமத்திற்கு எந்த பேஷியல் பொருந்தும்?

பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின் தேர்வுக்கு விட்டுவிடலாம்.

பருக்கள் உள்ளவர்கள் பேஷியல் செய்யலாமா?

பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம் கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.

பேஷியல் செய்தால் என்ன மாற்றத்தை உணரலாம்?

பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாய்ண்ட்டுகளில் அழுத்தம் கொடுக்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. பேஷியல் செய்தாலே நிச்சயமாக ஒரு நல்ல உணர்வை உணர்வார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷனுடன் வந்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியைப் பெறுவார்கள்.

கர்ப்பிணிகள் பேஷியல் செய்யலாமா?

எல்லாருமே கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியம் மன அமைதிதான். அது எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.

பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்து வறுத்திக் கொண்டிருந்தால் அந்த பேஷியலால் எந்த பலனும் இருக்காது.

எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான்.

மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே நாம் மன அமைதியை அடைவோம். மன அமைதியும், ரத்த ஓட்டம் சீராவதும் நமது உடலுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்பதை மறுக்க முடியாது.

Related posts

நீங்கள் இத மட்டும் செய்ங்க… எவ்வளவு கருப்பா இருந்தாலும் ஒரே வாரத்துல கலராக்கிடும்…

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை விரைவாக குறைக்க இதோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடுங்கள்!

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan

முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடனே மேக்கப்பை பொருட்களை மாற்ற வேண்டும் என்பதை அறிய உதவும் 7 அறிகுறிகள்!!!

nathan

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

nathan

கண்களை சுற்றி இருக்கும் சுருக்கங்களை போக்கனுமா?பலன் தரும் கைவைத்தியங்கள் முயன்று பாருங்கள்!!

nathan