21 6163c6f
சமையல் குறிப்புகள்

பன்னீரில் இட்லி செய்தால் அதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா?

பன்னீர் ஆனது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. பன்னீர் நம் அன்றாட சமையலில் ஒரு இன்றியமையாத உணவு பொருளாகும்.

குறிப்பாக இறைச்சி சாப்பிடாத வெஜ் பிரியர்களுக்கு பனீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரோக்கியமான தசைகளுக்கும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் புரதம் அவசியமானது.

இதையடுத்து, இட்லி அல்லாமல் பனீர் இட்லி செய்தும் சாப்பிடலாம். பனீர் இட்லி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

தேவையான பொருட்கள்

பனீர் – 1 பாக்கெட்
அரிசி – 1 கிலோ
உளுந்து பருப்பு – 1/4 கிலோ
தயிர் – 1 கப்.
செய்முறை விளக்கம்

முதலில் அரிசி, உளுந்தை கிரைண்டரில் ஆட்டி ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

அடுத்து பன்னீரை நன்கு உடைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து , இந்த மாவை புளிக்க வைக்கவும்.

பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி நீராவியில் வேக வைத்தால் சுவையான பன்னீர் இட்லி ரெடி!.

இந்த இட்லியை தக்காளி சட்னியுடன், கார சட்னி, தேங்காய் சட்னி என அனைத்திற்கும் சேர்த்து பரிமாறினால் கூடுதல் சுவை கிடைக்கும்.

Related posts

சூப்பரான வெந்தயக்கீரை பருப்பு கடைசல்

nathan

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சூப்பரான சிக்கன் -தேன் சூப்

nathan

உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தமிழர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்கள் என்னென்ன?

nathan

இஞ்சி குழம்பு

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan

தக்காளி வெங்காய சாம்பார்

nathan

புதினா பன்னீர் கிரேவி

nathan