31.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
thinhair
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தலைமுடி ரொம்ப கொட்டுதா?இதோ எளிய நிவாரணம்

பொதுவாக அனைவருக்குமே தலைமுடி நீளமாக அடர்த்தியாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஒருநாளைக்கு 100க்கு மேல் முடி கொட்டினால் அதை உடனடியாக கவனித்தாக வேண்டும், பொடுகு தொல்லை மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததே முடி கொட்டுவதற்கு காரணமாக அமையலாம்.

செயற்கையான ஷாம்புகள் பயன்படுத்துவதை விடுத்து இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதே சிறந்தது.

இந்த பதிவில், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
மருதாணி – 10 கிராம்
செம்பருத்தி – 10 கிராம்
கறிவேப்பிலை – 10 கிராம்
ஆவாரம் பூ – 10 கிராம்
கரிசலாங்கண்ணி – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
சோற்றுக் கற்றாழை – 50 கிராம்

செய்முறை
மருதாணி , செம்பருத்தி , கறிவேப்பிலை , ஆவாரம் பூ , கரிசலாங்கண்ணி , சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளயும்.

பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கயும்.

பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொண்ணிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நாட்களுக்கு பிறகு பயன் படுத்தவும்.

இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும், உடல் சூட்டை குறைப்பதுடன் கண் எரிச்சலுக்கு தீர்வாகும்.

Related posts

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

உங்களுக்கு முன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா?அப்ப இத படிங்க!

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இளநரை போக

nathan

அடர்த்தியான கூந்தல் பெறனுமா? இதெல்லாம் சூப்பர் குறிப்புகள்!!

nathan

முடி கொட்டும் பிரச்னையா?

nathan

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு, அரிப்பிலிருந்து நிரந்தரமாக விடுதலை தரும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

ஆஸ்பிரின் மாத்திரையை தலைக்கு பயன்படுத்திய சில நிமிடங்களில் ஏற்படும் அதிசயம்!

nathan