27.2 C
Chennai
Thursday, Jun 12, 2025
Arrested 2
அழகு குறிப்புகள்

மதுரையில் சிறுமியை திருமணம் செய்த காவலர் கைது!

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து விட்டு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து, பின்பு குற்றப்பிரிவு ஆய்வாளரின் ஓட்டுநராக பணிபுரிந்தார். இந்நிலையில், காவலர் பழனிக்குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதாக மாவட்ட சமூக நல அலுவலர்கள் மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து இந்த திருமணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பழனிக்குமார் விடுப்பு எடுத்துவிட்டு திடீரென்று கடந்த மாதம் அவரது சொந்த ஊருக்குச் சென்றது தெரியவந்தது. ஊருக்கு சென்ற அவரிடம் அவரது பெற்றோர்கள், அத்தை மகளான 17 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் அவரிடம் நமது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக சிறுமியை உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதற்கு பழனிக்குமாரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், அத்தை மகளாக இருந்தாலும் அவருக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதை கூட கேட்காமல் கட்டாய திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் பழனிக்குமார் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து கைது செய்தனர்.

news7tamil

Related posts

முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.

nathan

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

முயன்று பாருங்கள் முகப்பருவை போக்க இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது!…

sangika

கருவளையம் மறைய…

nathan

சர்வைவர் வெற்றியாளர் இவர் தான்! பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

nathan