சிற்றுண்டி வகைகள்

இட்லி

இரண்டு கப் பச்சரிசி
ஒரு கப் உளுந்து
கால் தேக்கரண்டி வெந்தயம்(அரிசியுடன் சேர்த்து ஊறவைக்கணும்)
இரண்டு மேஜைக்கரண்டி சாதம்
உப்பு சிறிதளவு

முதலில் உளுந்தை அரைத்து பிறகு அரிசி வெந்தயத்துடன் சாதம் உப்பு சேர்த்து
(மறக்காமல் கொர கொரப்பாக) அரைத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை சிறிது கொர கொரப்பாக அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில் கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி அவிக்கலாம்.

குறிப்புகள்:
நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.
அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் உற வைத்தும் காலையில் அரைக்கலாம்.
அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால் அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது. அதிகமாக கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு சத்துக்களும் போய்விடும்.

இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்பொழுது இட்லிமாவில் சிறிது வெந்தயப் பொடியை கலந்து தோசை சுடும்போது ருசியுடன் வாசனையாகவும் இருக்கும்.
பொதுவாக குக்கர் தட்டாயிருந்தாலும். ஏழுகுழி, ஐந்துகுழி அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும் இட்லி வேகும் நேரம் ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறி விடக்கூடும்.
idly 3

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button