27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
625.500.560.350.160.300.053.800. 1
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

தற்போதுள்ள உணவுப்பழக்க வழக்கங்கள் அதிகமாக மக்களிடையே பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை நாம் கண்கூடாக அவதானித்த வருகின்றோம்.

பிறந்திருக்கும் புத்தாண்டில் உணவு விடயங்களில் சில தீர்மானங்களை எடுத்து, அதனைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வினை தொடங்கலாமே… நாம் அன்றாடம் உணவுபழக்கவழக்கங்களில் என்னென்ன மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்பதை தற்போது காணலாம்.

சோடா

 

  • ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டுவிட்டு, செரிமானம் ஆவதற்கு சோடா குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • இவை பல்வேறு உடல் உபாதைகளை சந்திப்பதுடன், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு, கருத்தரிப்பதில் பிரச்னை, கல்லீரல், கணையம், குடல் போன்ற உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
  • சில தருணங்களில் இவை மரணத்தினையும் ஏற்படுத்தும்.

 

நடைபயிற்சி

 

  • வாரம் ஒன்றிற்கு 4 மணி நேரம் அல்லது நாள் ஒன்றிற்கு 35 நிமிடங்கள் கட்டாயம் நடக்க வேண்டுமாம்.
  • இதனால் பக்கவாதம், இதயநோய் பாதிப்பினை தடுக்கின்றது. நாம் நடக்கும் வேகத்தினைப் பொறுத்தே இதன் நன்மை கிடைக்கும். மெதுவாக நடந்ததால் 20%, வேகமாக நடந்தால் 24% கூடுதல் பலன் கிடைக்குமாம்.

 

சூர்ய வெளிச்சம்

 

  • பொதுவாக காலை, மாலை நேர சூர்ய வெளிச்சம் நமது உடலுக்கு மிகவும் நல்லது என்பதை தற்பேது மருத்துவர்கள் அதிகமாகவே கூறுகின்றனர்.
  • இவ்வாறு வெளிச்சம் படும்படி சென்றால், மனஅழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய மனச்சோர்வு இவற்றினை நீக்குவதோடு, கண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
  • குறிப்பாக குளிர்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று.

 

மசாஜ் அவசியம்

 

  • மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கும், மனதிற்கும் தேவையான மன அழுத்தத்தை குறைக்கின்றன.
  • மசாஜ் செய்வதன் மூலம் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுவதாகவும், நிம்மதியான தூக்கத்தை பெற முடியுமாம்.

 

பசுமையான இடங்களுக்கு செல்லுதல்

 

  • பசுமையான இடங்கள் என்பது நீல இடம் மற்றும் பச்சை இடத்தை குறிக்கின்றன. நீல இடம் என்பது ஆறு, ஏரி, குளம் போன்ற நீரோட்டமான இடங்களையும். பச்சை இடம் என்பது வயல்வெளி, காடுகள், தோட்டங்கள் போன்ற இடங்களையும் கூற பயன்படுத்தப்படுகின்றன.
  • ஏரி, பூங்கா, காடுகள் போன்ற பகுதிகளுக்கு சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தால் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • இயற்கை சூழலுக்கு அருகே நாம் இருப்பதன் மூலம், சுவாச கோளாறுகள் ஏற்படாமலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைத்திடவும், மேம்பட்ட மனநலம், மனச்சோர்வில் இருந்து விடுதலை போன்ற எண்ணற்ற நன்மைகளை எளிதில் பெற்றிட முடியும்.

Related posts

பெண்களே கொழுகொழு குழந்தை பிறக்கணும்னா இந்த 5 யும் செய்ங்க…

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்னால் தெரியும் அறிகுறிகள்!

nathan

உயரமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

nathan

உங்களுக்கு தெரியுமா துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

nathan

வளர்ச்சிக்குத் தடையா?

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்..!!

nathan

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்க…

sangika