27.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
Suicide
மருத்துவ குறிப்பு

தற்கொலைகள்

பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சிகொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக்கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் பலவரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச்சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன.

நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனைபேர்? விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான். ஏன் அவ்வாறான எண்ணம் தோன்றியவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை? அது ஒரு கணநேர மனநிலைத்தடுமாற்றம். சில கேள்விகளுக்கு அவர்கள் விடைதேடிக் கொள்
கிறார்கள். மறுகணம் தமது முடிவைமாற்றிக் கொள்கிறார்கள்.

  • நான் இறப்பதால் கிடைக்கும் பலன் என்ன?
  • நான் இறந்துவிடின் துன்பப்படுபவர்கள் எத்தனைபேர்?
  • ஒரு சிறு நன்மையாவது என்னால் இந்த உலகத்துக்கு உள்ளதா?
  • நான் இறப்பின் மனத்தால் சித்திரவதைப்படுபவர்கள் உள்ளார்களா? உதாரணமாக ஒருவர் நான்
  • இதைச் செய்திருந்தால் இவர் இறந்திருக்கமாட்டாரா? என்று எண்ணித் துன்புறப் போவதுயார்?

  • எனது இக்கட்டான இம்மனநிலைக் குழப்பத்துக்கு வேறு மாற்றுவழியுள்ளதா?
  • வாழ்வில் ஒருதடவையேனும் நான் மற்றவர்களால் பாராட்டப்பட்டு உள்ளேனா?
  •  என்னைவிட மிகச்சிக்கலில் உள்ளவர்கள் இருக்கிறார்களா?
  • ஆன்மீகப் பற்றுள்ளவராயின் இறந்தபின் என் ஆவிக்கு கொடுமையான மறுபிறப்பு கிடைத்துவிடுமா?
  • தவறுதலாக உயிர்பிழைப்பின் என் கௌரவம் என்ன ஆகிவிடும்?

ஏனோ ஒருசிலர் இவ்வாறான கேள்விகளைச் சந்திக்க முதலே முடிவெடுத்துவிடுகிறார்கள் அல்லது கேட்டுக் கேட்டு விடைதெரியாமல் வேறுவழியற்று மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்களா?

இப்படியாக இறப்பவர்களில் பலர் மனதளவில் மிகவும் துன்புற்றவராகவே தனது பிரச்சினைகளைக் கலந்து ஆலோசிக்க தகுந்தநபர் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.

அடுத்து எமது இளைய தலைமுறையினரின் தற்கொலை முயற்சிக்குப் பொதுவான காரணங்கள் தான் நம்பமுடியாமல் உள்ளன.

  • மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குப் பெற்றோர் கடன் எடுத்துத் தரமுடி யாமை.
  • காதலனோ, கணவரோ, மனைவியோ கையடக்கத் தொலைபேசி அழைப்புக்குபதிலளிக்காமை.
  • தொலைக் காட்சி பார்ப்பதையோ, வேறு கேளிக்கைகளையோ குறைக்குமாறு கண்டிக்கப்படுகின்றமை.

ஏன் இப்படியான நிலைமை ஏற்படுகின்றது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான மனநெருக்கம் குறைவடைந்தமை தான் காரணம், வேறுவேறு காரணிகளால் ஒருவரையொருவர் அறிந்தும் புரிந்தும் கொள்ள
நேரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை.

எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை யாரும் தாழ்வாகவோ, வெறுப்பாகவோ நோக்குகின்ற தன்மை இயலுமான வரை குறைக்கப்பட வேண்டும். உடலில் ஏற்படும் நோய் போல அவருக்கு மனதளவில் தற்காலிகமாக ஏற்படும் ஓர் இயலாத் தன்மைதான் இதற்குக்காரணம்.

தற்கொலை எண்ணம் ஏற்பட்டு வலுப்படுகையில் அந்தநபர் தன்னையேகேள்விகேட்டு மனநிலையைச் சீராக்கலாம். புரிந்துணர்வு உடைய ஒருவருடன் உரையாடித் தெளிவடையவேண்டும். வன்னியில் இடம் பெயர்ந்த எம்மக்கள் இத்தனை இழப்பின் பின்பும் தமது நிலையைக் கட்டி எழுப்புகின்ற மனவலிமையுடையவர்களாக இருக்கின்ற போது அதே இளம் சமுதாயம் ஏன் இப்படி வழிமாறிக் கொண்டு இருக்கிறது. விடையை அவரவரே தேடிக் கொள்வோம்.

பாகவோ நோக்குகின்ற தன்மை இயலுமானவரை குறைக்கப்பட வேண்டும். உடலில் ஏற்படும் நோய் போல அவருக்கு மனதள வில் தற்காலிகமாக ஏற்படும் ஓர் இயலாத்தன்மைதான் இதற்குக்காரணம்.

தற்கொலைஎண்ணம் ஏற்பட்டு வலுப்படுகையில் அந்தநபர் தன்னையேகேள்விகேட்டு மனநிலையைச் சீராக்கலாம். புரிந்துணர்வு உடைய ஒருவருடன் உரையாடித் தெளிவடையவேண்டும்.

வன்னியில் இடம் பெயர்ந்த எம்மக்கள் இத்தனை இழப்பின் பின்பும் தமது நிலையைக் கட்டி எழுப்புகின்ற மன வலிமையுடையவர்களாக இருக்கின்றபோது அதே இளம் சமுதாயம் ஏன் இப்படி வழிமாறிக் கொண்டு இருக்கிறது. விடையை அவரவரே தேடிக் கொள்வோம்.Suicide

Related posts

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தினமும் இஞ்சி சாப்பிடுவது பெண்களை எப்படி ‘அந்த’ பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் தெரியுமா?

nathan

பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே

nathan

மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரை

nathan

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் சோம்பு…!

nathan

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா?

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan