29.9 C
Chennai
Tuesday, Oct 1, 2024
201610260914199754 natural medicine for fever SECVPF
மருத்துவ குறிப்பு

காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்

உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம்.

காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்
காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம்.

கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

கீழாநெல்லி,
மிளகுப்பொடி,
பனங்கற்கண்டு.

கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி, வாய் கசப்பு சரியாகும்.

கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலையை போக்க கூடியது. எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம்.

நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

அதிமதுரப் பொடி, சுக்குப்பொடி, சீரகம். கால் ஸ்பூன் அதிமதுர பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை, தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும்.

இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும். இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம்.

இதை குடித்துவர காய்ச்சல் குறையும், உடல் வலி, வாய் கசப்பு, வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது.

துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

துளசி, மிளகுப்பொடி. துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும். காலை, மாலை, இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.natural medicine for fever

Related posts

ஒரே நிமிடத்தில் எடையை மாற்றலாம்

nathan

லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே!

nathan

உடலில் ஏற்படும் சூட்டை உடனடியாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்

nathan

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

படிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

nathan

100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்! ‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ !! ஹெ…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பை நீர்கட்டி வரக்காரணம் என்ன?

nathan