32.6 C
Chennai
Tuesday, Oct 1, 2024
tur besan
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!

சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். அப்படி முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு தூக்கமின்மை, வெயிலில் அதிகம் சுற்றுவது, ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவற்றுடன், சருமத்தை சரியாக பராமரிக்காததும் ஒரு முக்கிய காரணமாகும். இப்படி சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும்.

ஆகவே முகமானது பட்டுப்போன்று மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க வாரம் 1-2 முறையாவது ஃபேஸ் பேக் போட்டு வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவேடு இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

 

சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையினால், சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறை போட்டு வந்தால், நல்ல பலன் காணலாம்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்

 

4 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதனை பச்சை பால் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சந்தன மாஸ்க்

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் மறைந்து, பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

 

1 டேபிள் ஸ்பூன் தேனில் 3-5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தவறாமல் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

ஹெர்பல் பேக்

Homemade Ayurvedic Face Packs For Glowing Skin
சிறிது கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமைகள் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

Related posts

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கோபம்

nathan

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க

nathan

உங்கள் மனதுக்கு பிடித்த பெண் உங்களை காதல் செய்யவில்லையா கவலையை விடுங்க இத படியுங்க..!

nathan

உங்களுக்கு தெரியுமா முதுகுவலியை நிரந்தரமாக விரட்டும் பூண்டுப்பால்… செய்வது எப்படி?

nathan

உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சிறுநீரக நோய்களை தீர்க்கும் சூப்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வெங்காய டீ குடிச்சா பிபி எட்டி கூட பாக்காதாம்…! கெட்ட கொழுப்பும் கரைந்து ஓடிடுமாம்?

nathan