29.7 C
Chennai
Friday, Jul 18, 2025
image
மருத்துவ குறிப்பு

சு கர் ஃப் ரீ மா த்திரைகளை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளே! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யாது என்பதற்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகளை நீரிழிவு நோயாளிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் நன்மையை விட தீமைகளே அதிகம் நடைபெறுகின்றது. இது பசியை தூண்டு, உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சுகர் ஃப்ரீ மாத்திரைகளை வைத்து ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதனை சோதனை எலிகளுக்கும், பறக்கும் பூச்சிகளுக்கும் கொடுத்துள்னர். இதில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளிலுள்ள செயற்கை தயாரிப்பான சுக்ரலோஸ் என்ற இனிப்பு, எலிகளுக்கு பசியை அதிகம் தூண்டியிருக்கிறது.

 

இதனால் இவைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொண்டிருக்கின்றன. கலோரி அளவினை கூட்டும் சர்க்கரையின் அளவு குறைவதால் , சக்தி குறைகிறது. இதனால் தனிச்சையாக மூளை சக்தி கிடைப்பதற்காக அதிக உணவை உண்ணச் சொல்லி பசியை தூண்டுகிறது என்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இனிப்பிற்கும் சக்திக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் இந்தசுகர் ஃப்ரீ மாத்திரைகள் இந்த இரண்டிலும் சம நிலை செய்யத் தவறுவதால்தான் , கலோரி அளவை மூளையானது அதிகரிக்கச் செய்கிறது.image

பறக்கும் பூச்சிகளுக்கும் அந்த வகையில் இந்த செயற்கை இனிப்புகளை கலந்து 5 நாட்களுக்கு உண்ண கொடுக்கப்பட்டது. பின் இயற்கையான இனிப்பு வகைகளை உண்ண அளிக்கும்போது, அவை வழக்கத்திற்கு மாறாக 30 % அதிகமான கலோரி கொண்ட உணவுகளை உண்டதாக ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் எலிகளுக்கும் இதே முறையில் செயற்கை 7 நாட்களுக்கு கொடுத்தார்கள். பறக்கும் பூச்சிகளைப் போலவே இவைகளும் மிக அதிகமாக உணவுகளை உன்ண ஆரம்பித்தது.

 

மேலும் இந்த ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சோம்னியா என்ற தூக்கமின்மை வியாதி ஏற்பட வாய்ப்புண்டு மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டியை தூண்டும். இதனால் போதிய சக்தி குறைந்து பலவீனம் ஏற்படும். இது சக்கரை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.

எனவே சக்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின் பின்னர் எடுத்து கொள்ளவும்.

Related posts

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் அடிக்கடி வெந்நீர் குடிப்பவரா ? அவசியம் படிங்கள்….

nathan

தசைப்பிடிப்பு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

nathan

பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை

nathan

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சிசேசரியன் செய்ததால் தாய்ப்பால் பற்றாக்குறையா?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்!

nathan