சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

வெயில் காலத்தில் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, உருளைக்கிழங்கு வைத்து சத்துநிறைந்த பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா
தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு – 1 கப்
ராகி மாவு – 1 கப்
எண்ணெய், உப்பு – தேவைக்கு
தயிர் – 3 ஸ்பூன்

மசாலாவிற்கு :

உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
ஓமம் – சிறிதளவு
மிளகாய் தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் ராகி, கோதுமை மாவை போட்டு தயிர், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து இருக்கும் கிழங்கை மசித்து சேர்க்கவும்.

* பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், ஓமம், மிளகாய் தூள், சீரகபொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.

* தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் இந்த ஆலு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவாக உருட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான ராகி ஆலு பரோட்டா ரெடி.201704060858156958 how to make ragi aloo paratha SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button