625.500.560.350.160
Other News

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! பல பெண்களுடன் நெருக்கம்! கணவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி

தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், எனக்கு திருமணமாகி, கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதவரம் காவல் மாவட்டத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வக்குமாருக்கும் எனக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரே அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

625.0.560.350.16
இதனால், செல்வக்குமாரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் சேர்த்து வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த புகார் குறித்து ராதிகா கூறுகையில், சென்னை, வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

கடந்த ஆண்டு நான் ஒரு வழக்கு தொடர்பாக கிண்டி காவல்நிலையத்திற்கு சென்றிருந்தேன். அதன் பின் அங்கிருந்து அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த போது, பொலிஸார் உடையில் வந்த காவலர் ஒருவர், என்னிடம் வந்து,

தன்னுடைய பெயரை செல்வக்குமார் என்று கூறியதோடு, உங்கள் செல்போனைக் கொடுங்கள், ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறினார்.

நானும் பொலிஸ் என்பதால், அவரிடம் போனை கொடுத்தேன், ஆனால் அவரோ என்னுடைய நம்பரில் இருந்து, அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின் எனக்கு போன் செய்து பேசிய அவர், உங்களை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உங்களை விரும்புகிறேன் என்று கூறினார்.

இதனால், நானும் வீட்டில் முறைப்படி வந்து பேசும்படி கூறினேன். அதற்கு அவரோ, முதலில் திருமணம் செய்து கொள்வோம். பிறகு உன்னுடைய வீட்டிலும் என்னுடைய வீட்டிலும் சொல்வோம் என்று கூறி, திருமணம் செய்து கொண்டார்.625.0.560.350.160.300.053.800 1

இருவரும் அதன் பின் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். என் மீதும் மற்றும் குழந்தைகள் மீது பாசமாக இருந்தார்.

ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில், அவருடைய நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு முறை அவர் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருடைய செல்போனை எடுத்து பார்த்த போது, அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

வாட்ஸ் ஆப்பிலும் பல பெண்களுடன் அவர் பேசியுள்ளார். இது போன்ற நிலையில், அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருப்பது கேள்விட்டேன், உடனடியாக அவரிடம் கேட்ட போது, அந்தப் பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதிக்காததால், எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது.அதன்பிறகு செல்வக்குமார் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடைய செல்போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டார்.

இதன் காரணமாகவே புகார் அளித்துள்ளேன், என்னைப் போன்று ஒரு பெண் ஏமாந்துவிட்டகூடாது என்று கூறியுள்ளார்.625.0.560.350.160.300

Related posts

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.!

nathan

அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

nathan

மார்பிலும் புற்றுநோய்… கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டனர் – கதறி அழுத நடிகை சிந்து

nathan

மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஸ்ரேயா!

nathan

ஜான்வி அணிந்த லெஹங்கா: இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

nathan

வெளியேறிய பின்னர் ஜோவிகா சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர்.!

nathan

அம்பானி திருமண கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் ரன்பீர் – ஆலியா..

nathan

தாலி பிரித்து கட்டிய நடிகர் பிரேம்ஜி

nathan

அம்மா ஆக போவதை அறிவித்தார் நாதஸ்வரம் சீரியல் நாயகி

nathan