32.6 C
Chennai
Friday, Jul 17, 2026

தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்

இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

திரையுலக பிரபலங்களும் இதற்காக நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். நேற்று தல அஜித் ரூபாய் 1.25 கோடி நிவாரண நிதியாக கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நிவாரண நிதியாக கொடுக்க ரூபாய் 25 கோடியை ஒதுக்கி உள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தொகையை நேரடியாக அரசாங்கத்திடம் கொடுக்காமல் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.