28 1509193379 bcover1 22 1466581299
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

பெண்களுக்கு தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்களது முகத்தில் எந்த விதமான மாசு மருக்கள், பருக்கள், கருமை போன்றவை இல்லாமல் முகம் பிரகாசமாக இருந்தாலே அது அழகு தான். ஆனால் வெளியில் இருக்கு அதிக தூசிகள், புகைகள் போன்றவற்றாலும், நாம் அதிகமாக கெமிக்கல்களை பயன்படுத்துவதாலும் முகம் அதனுடைய வசீகரத்தை இழந்துவிடுகிறது. இதற்கு நீங்கள் தீர்வு காண இயற்கையை நாடுவதே சிறந்த வழியாகும். உங்களது அழகை பாதுகாப்பதில் குங்குமப்பூ முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த பகுதியில் குங்குமப் பூவை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்துவது என்பது பற்றி காணலாம்.

குங்குமப் பூ குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

நகங்கள் அழகு பெற இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ வெண்ணை கலவையானது சீர்ப்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

கண்கள் அழகாக முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள் தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர் ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

உருளைக்கிழங்கு எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

துளசி துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

துளசி துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் தக்காளி மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.28 1509193379 bcover1 22 1466581299

Related posts

சருமம், கூந்தலை பொலிவுறச் செய்யும் கொத்தமல்லி

nathan

உங்க சருமம் அழகாவும் பொலிவாகவும் ஹீரோயின் மாதிரி இருக்க.. சூப்பர் டிப்ஸ்

nathan

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ!

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க

nathan

முகத்தை பொலிவாக்கும் ஆலிவ் எண்ணெய்!

nathan

சருமம் பொலிவாக தர்பூசணி – skin benefits of watermelon

nathan

வேனிட்டி பாக்ஸ் வாக்சிங்tamil beauty tips

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

அழகான மூக்கிற்கான குறிப்புகள்

nathan