28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
முகப் பராமரிப்பு

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி

இன்றைய பெண்கள், சருமம், கூந்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இன்று பப்பாளியை வைத்து கூந்தல், சருமத்தை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி
தேவையான பொருட்கள் :

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 1
உலர்ந்த திராட்சை பழம் – 10

இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

கூந்தல் மாஸ்க் :

பழுத்த பப்பாளி – ஒரு கப்
தயிர் – அரை கப்

பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.

கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது. தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.

30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.

வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Related posts

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!

nathan

இதோ உங்க பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

nathan

குங்குமப்பூவை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

nathan

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan