சரும பராமரிப்பு

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு – 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

வெட்டி வேர் – 200 கிராம்

அகில் கட்டை – 200 கிராம்

சந்தனத் தூள் – 300 கிராம்

கார்போக அரிசி – 200 கிராம்

தும்மராஷ்டம் – 200 கிராம்

விலாமிச்சை – 200 கிராம்

கோரைக்கிழங்கு – 200 கிராம்

கோஷ்டம் – 200 கிராம்

ஏலரிசி – 200 கிராம்

பாசிப்பயறு – 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
turmeric%2Bpowder

Related posts

சருமத்தின் மாசுக்களை அகற்றும் கரித்தூள் !!

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….சூப்பர் டிப்ஸ்

nathan

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க என்ன செய்யலாம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் எலுமிச்சை

nathan

எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

nathan

வியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்…!

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்…

nathan