29.6 C
Chennai
Thursday, May 22, 2025
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

 

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும்.

கருவளையத்திற்கு உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும்.

அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கற்றாலை ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். கற்றாலை சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிகிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் கற்றாலை மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

Related posts

இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டார்களாம்..

nathan

நீங்கள் நெஞ்சு சளியால் மிகவும் அவதி படுகிறீர்களா ! பாட்டி வைத்தியத்தை உடனே செய்யுங்க !

nathan

இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு பொடி

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..’பரு’வப் பிரச்சினையா?

nathan

வீட்டிலேயே ஃபேஸ் பேக் பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம்

nathan

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

sangika

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan

வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan