31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

eyeபெண்களுக்கு பெரிய பிரச்சனையே கண்ணுக்கு கீழே ஏற்படுகின்ற கருவளையம் தான். அந்த கருவளையத்திற்கு தீர்வு தருகிறது எலுமிச்சை.

* அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

* எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும்.

* ஜூரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.

* 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள்.

* கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.

* இளம் வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு வயதான தோற்றத்தைத் தரும்.

* இதற்கு அருமையான வைத்தியம் எலுமிச்சையில் இருக்கிறது. துருவிய உருளைக்கிழங்கு – அரை கப் எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன், இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

* முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

Related posts

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் 40 நாள் செவ்வாழையுடன், தேன் கலந்து சாப்பிடுங்க!

nathan

மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…நமது தொப்புளை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக!…

sangika

வேப்ப இலையை வைத்து பொடுகை போக்குவது எப்படி…?

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

nathan