தேவையானவை
கடலை மாவு – 750 கிராம்
சர்க்கரை – 2 கிலோ 400 கிராம்
நெய் – இரண்டரை லிட்டர்
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாவு காய்ச்ச வேண்டும். அதற்கு சர்க்கரை சேர்த்து முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். அதன் பின் அடுப்பை ஆன் செய்யவும். மற்றொரு அடுப்பில் குருணை நெய் சேர்த்து வேக வைக்கவும். இதற்கு இடையில் மைசூர் பாக் தட்டில் நெய் தடவி வைக்கவும். இப்போது சர்க்கரை பாவு கையில் ஒட்டும் பதம் வந்ததும் அதில் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். இதை நன்கு கிளற வேண்டும்.
கடலை மாவு வாசம் வந்ததும் வெதுவெதுபான நெயை ஊற்றவும். இறுகி இறுகி வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றவும். கிளறி கொண்டே இறக்க வேண்டும். நிறம் மாறி வந்ததும் அதை தட்டில் ஊற்றி சமன் செய்து ஆறவிட வேண்டும்.
அதன் மேல் நெய் தடவிய வாழை இலையை போட்டு மூடி முக்கால் மணி நேரம் கழித்து எடுத்து நறுக்க வேண்டும். இப்போது தித்திப்பான, சுவையான கெட்டி மைசூர் பாக் ரெடி. இதை நெய் அல்லது வனஸ்பதி எண்ணெயில் செய்யலாம்.