30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

சென்னையில் தவறான நடத்தை காரணமாக மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் இந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷியாமளா தேவி (36). இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். குடும்ப வறுமை காரணமாக ஷியமளா தேவி கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு அருகில் உள்ள எலக்ட்ரானிக் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், ஷியமளாதேவியின் நடத்தை குறித்து கணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது மனைவியை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று காய்கறி வெட்டும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் வெளியே வந்த ஷியமளா தேவி பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், ஷியாமளாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சுரேஷை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம்: இரவில் அழுத குழந்தை: கொடூர தாய்…!

nathan

குரு பெயர்ச்சி பலன் 2024: வேலையில் புரமோசன்..

nathan

சென்னை ரோட்டில் ரூ 9கோடி கார்! இந்தியாவிலேயே முதல் கார் இது தான்!

nathan

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை…

nathan

அத்தைக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் இஷ்டத்துக்கு உல்லாசம் …போலீசார் தேடி வருகின்றனர்

nathan

அரைகுறை ஆடையில் இலங்கை லாஸ்லியா

nathan

நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

ரூ.1.25 கோடி வென்ற சேவல்

nathan

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே!

nathan