26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
SGQrWMLqBz
Other News

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

சென்னையில் தவறான நடத்தை காரணமாக மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் இந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷியாமளா தேவி (36). இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். குடும்ப வறுமை காரணமாக ஷியமளா தேவி கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு அருகில் உள்ள எலக்ட்ரானிக் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

SGQrWMLqBz

இந்நிலையில், ஷியமளாதேவியின் நடத்தை குறித்து கணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது மனைவியை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று காய்கறி வெட்டும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் வெளியே வந்த ஷியமளா தேவி பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், ஷியாமளாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சுரேஷை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இளையராஜாவை சீண்டிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் எச்சரிக்கை

nathan

ஆர்யா – சாயிஷாவின் மகள் ஆரியனாவா இது!!புகைப்படம்

nathan

ரஜினியின் ஜெயிலர் – ”இனிமேல் குடிக்க மாட்டோம்…” ரசிகர்கள் சபதம்

nathan

விஜயகாந்த் சொந்தங்கள் கதறி அழும் காட்சி

nathan

கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

nathan

தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்கள் : அலறவைத்த மகள்

nathan

மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்?

nathan

ரீ என்ட்ரி கொடுத்த நமீதா..

nathan

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி போட்டோ ஷூட்..!வைரலாகி வருகிறது

nathan