32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!
முகப் பராமரிப்பு

முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!

சருமத்தைப் பராமரிக்க காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அழகு பராமரிப்புப் பொருள் தான் சமையலறையில் இருக்கும் மஞ்சள் தூள். அக்கால பெண்கள் தங்களின் முகத்திற்கு அன்றாடம் மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் தான், அவர்களுக்கு எவ்வித சரும பிரச்சனைகளும் வந்ததில்லை.

இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கிருமிநாசினி பண்புகள் தாள். அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தான், இது பல சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்போரின் எண்ணிக்கை குறைவு. மாறாக மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் தான் போடுகிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் இக்காலத்தில் மஞ்சளை முகத்திற்குப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை பெண்கள் செய்கின்றனர். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையில்லாத பொருட்களுடன் சேர்ப்பது

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

நீண்ட நேரம் கூடாது

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர்

மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

கழுத்துப் பகுதியை தவிர்ப்பது

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

தண்ணீர் தான் சிறந்தது

எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

சோப்பைப் பயன்படுத்தக்கூடாது

முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

உங்க முகம் பிரகாசமா ஜொலிக்க… ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

லிப்ஸ்டிக் உபயோகித்தால் இந்த பிரச்சனைகள் வருமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும வகைகளும்… அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகளும்…

nathan

உங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா…

nathan

பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் ஃபேஸ் மாஸ்க்…!

nathan

பால் போன்ற சருமம் கிடைக்க இதை முயன்று பாருங்கள்…

nathan

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

nathan

உங்களுக்கு பருக்கள் மறைந்த பின்பும் சிகப்பு நிறத் தழும்பு இருக்கிறதா?அப்ப இத படிங்க!

nathan