அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…காட்டுக்குள் 17 வருடங்களாக காரோடு வாழும் வன மனிதர்!

கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவின் கர்நாடகா காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் முதியவர் ஒருவர் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

56 வயதான சந்திரசேகர் எனு குறித்த நபர், தனது வாழ்நாளில் 17 வருடங்கள் தட்சிணா கர்நாடகாவின் சுல்லியா தாலுகாவின் அரந்தோடு அருகே அடலே மற்றும் நெக்கரே கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்து உள்ளார்.

வன மனிதர் சந்திரசேகர் ஒரு காலத்தில் நெக்ரல் கெம்ராஜே கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலங்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ 40 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய காரை தவிர அனைத்தையும் ஜப்தி செய்ததுடன் வங்கி அவரது நிலத்தை ஏலத்தில் விட்டு, அவரை நிலமற்றவராக்கியது.

வங்கி நடைவடிக்கைகளால் வீட்டை விட்டு வெளியேறிய சந்திரசேகர், தனது தங்கை வீட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தார். எனினும் அங்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய காருடன் அடர்ந்த வனத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு 17 வருடங்கள் வாழ்ந்துவந்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில், அவர் காடுகளில் இருந்து மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளை நெசவு செய்து, அருகிலுள்ள கிராமக் கடையில் விற்று தனக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கியுள்ளார்.

எனினும் தொற்றுநோய்க்குப் பிறகு, அவர் காட்டுப்பழங்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்து உள்ளார். இதேவேளை சந்திரசேகர் தனது கொரோனா தடுப்பூசியை நாகரிகத்திலிருந்து தனித்திருந்த போதிலும் அரந்தோட் கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் அந்த முதியவர் சந்திரசேகர் வங்கியிடமிருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்பதே தன்னுடைய லட்சியம் என கூறுகிறார்.

Related posts

ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை வழங்க அன்னாசிப்பழம் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது..

nathan

ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம்

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

90ஸ் நடிகை அபிராமியா இது! நம்ப முடியலையே…

nathan

உங்களுக்கு உடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா? அப்ப இத படிங்க!!

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் திரும்பினார் -கால்விரல்கள் அகற்றப்பட்டவரின் தற்போதைய நிலை

nathan

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் அடித்துக்கொலை…

nathan

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan