26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
eye1 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

ஒரே நாளில் யாருக்குக் கண்களுக்குக் கீழே கருவளையம், கரும் புள்ளிகள் தோன்றிவிடுவதில்லை.

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டறிய முயன்றால், இதனை சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிதாக இருக்கும்.

 

eye1 1

கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருப்பது தூக்கம்தான். தினமும் ஆறு முதல் 7 மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம்.

வாரம் ஒரு முறை அரை மணி நேரம் வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது நல்ல பலன் கொடுக்கும்.

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

கண்ணுக்கு நல்ல தரமான மைகளையே பயன்படுத்த வேண்டும், தினமும் அவற்றை படுக்கப் போகும் முன்னர் நன்றாக கழுவிவிட வேண்டும்.

அதேபோன்று கரும்புள்ளிகள் முகம் மட்டுமின்றி உடல் முழுவதும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கரும்புள்ளியால் அவஸ்தைப் படுபவர்கள் ஆரஞ்சு பழத் தோலை காயவைத்து அத்துடன் பயத்தம் மாவு சேர்த்து அரைத்துப் பூசி காய வைத்து குளித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோன்று ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு துருவல் சாறுடன் அரை டீஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை தினசரி காலை, மாலை இரு வேளையும் முகம் முழுவதும் நன்கு தடவவும். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்து வந்தால், சில வாரங்களிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி வித்தியாசத்தை உணர முடியும்

Related posts

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan

ஒரே வாரத்தில் முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

ஆண்களே உங்களது எண்ணெய் வழியும் சருமத்தோடு சிரமப்படாதீங்க! இதை முயன்று பாருங்கள்!

nathan

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

nathan

முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan