29.4 C
Chennai
Wednesday, Aug 20, 2025
1 1538049390
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பாலை கொண்டு முக பருக்களை நீக்கி இளமையான முகத்தை பெறுவது எப்படி..?

முகம் பளபளன்னு இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், கீறல்கள், கருமை நிறம், மங்கிய தன்மை என அனைத்துமே நம் முக அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றன. இதனை தடுக்க ஏராளமான வழி முறைகளையெல்லாம் நாம் பயன்படுத்தி களைத்து போயிருப்போம். இனி கவலையை விட்டு தள்ளுங்கள்.

முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்காய் பாலை கொண்டு அழகு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

சுவைமிக்க தேங்காய் பால்…

தேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது. தேங்காயை சமையலுக்கு பல விதங்களில் நாம் பயன்படுத்துகிறோம். அதே போன்று இவை முகத்தின் பொலிவிற்கும் உபயோகிக்கலாமாம்.

ஆரோக்கியம் நிறைந்த பால்… தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

இதில் உள்ள சத்துக்கள்… புரதம் வைட்டமின் ஏ இரும்புசத்து வைட்டமின் சி கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் ஜின்க்

வறண்ட சருமத்திற்கு முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

தேவையானவை :- தேங்காய் பால் 1/2 கப் ரோஸ் நீர் 1/2 கப் ரோஜா இதழ்கள்

செய்முறை :- முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.

இளமையான முகத்திற்கு நீண்ட நாட்கள் இளமையாக் இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.

தேவையானவை :- பாதாம் 6 தேங்காய் பால் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

பருக்கள் நீங்க முகத்தின் அழகை கெடுத்து கொண்டிருக்கும் இந்த பருக்களை நீக்குவதற்கு முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் குணமாகும்.

தேவையானவை :- தேங்காய் பால் 3 ஸ்பூன் ஓட்ஸ் 3 ஸ்பூன்

செய்முறை :- முகப்பருக்களை ஒழிக்க முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும்.

பளபளப்பான முகத்தை பெற முகம் மிகவும் பளபளப்பாக இருக்க ஒரு அருமையான வழி உள்ளது. அதற்கு இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும்.

1 1538049390

Related posts

முயன்று பாருங்கள் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு!!

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan

முகம் பொலிவு பெற இந்த எளிய குறிப்புகளை செய்யுங்கள்!…

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan

சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

பன்னீர் ரோஜாவை எப்படி பயன்படுத்துவது..முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

nathan

நீங்களே பாருங்க.! மகன் ராணுவ வீரனாக வந்த போது மீன் விற்கும் தாய் செய்த செயலைப் பாருங்க…

nathan

உண்மையை உடைத்த நடிகர் ரகுவரன் மனைவி! மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம்..வெளிவந்த தகவல் !

nathan