30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201807231045372530 1 Simple home remedies for pimples. L styvpf
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்

பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும். 

நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை எப்படி நீக்குவது என்பதைக் காண்போம்.

இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.

201807231045372530 1 Simple home remedies for pimples. L styvpf

சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.

இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான். தமிழில் தேயிலை மர எண்ணெய் என அழைக்கப்படுகிறது. டீ ட்ரீ ஆயில் கிட்டில் துளசியும் சேர்ந்திருக்கும். அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் இது கிடைக்கும். எந்த ஒரு ப்ராடக்டையும் ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் தோலிற்கு மிகவும் நல்லது. நல்லெண்ணெயும் தோலிற்கு மிகவும் நல்லது.

நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.

அந்தக் காலத்தில் பரு வந்தால் பெரும்பாலும் பெண்கள் ஜாதிக்கா யைத்தான் பயன்படுத்துவார்கள். இது தோலுக்கு மிகவும் நல்லது. முழு ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.

Related posts

சருமத்திற்கு குளுமை தரும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்

nathan

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்

nathan

கழுத்தில் கருவளையம்

nathan

ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்? அதன் தொடர்பாக நிலவும் பொய்கள்!!

nathan

சிலி நாட்டில் பயங்கரம்., வெளிவந்த ஆதாரங்கள்

nathan

டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

நடிகை கங்கனா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா ? வருமானம் இவ்வளவு இருக்ககா ?

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan