அழகு குறிப்புகள்

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல் தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.

கசகசா – 2 டீஸ்பூனுடன்,
10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். மெல்லிய ஆர்கண்டி துணியை ஜில் தண்ணீரில் நனைத்து பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன் மேல் இந்த விழுதை பத்து போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்தச் சிகிச்கைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இந்த சிகிச்சையின் போது முகத்துக்கு க்ரீம் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதல் டிப்ஸ்: கூந்தலுக்கு இறுக்கமாக க்ளிப் போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக்கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.

Related posts

கசிந்த தகவல் ! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி செல்லும் இடம் இது தானாம் !

nathan

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

nathan

அக்குள் கருமையை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

வர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ்

nathan

குங்குமப்பூ தரும் அழகு

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan

மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும்…

nathan

பெண்கள் இதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது

nathan