அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

 

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும்.

கருவளையத்திற்கு உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும்.

அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கற்றாலை ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். கற்றாலை சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிகிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் கற்றாலை மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்,,, கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால் எப்படி குறைப்பது?

nathan

கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி?…

sangika

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது?….

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

nathan

முகப்பருக்களை ஒழிக்க காளான்!…

sangika

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…!

nathan

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan