22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
pNjmhow
சரும பராமரிப்பு

குங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா?

நிறைய அழகுக் குறிப்புகளில் குங்குமாதி தைலம் பற்றிப் படித்திருக்கிறேன். அது என்ன? நிறத்தை அதிகரிக்க உதவுமா? எப்படி உபயோகிப்பது?

ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியதுதான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவி விடலாம்.

எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.
குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.pNjmhow

Related posts

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

இயற்கை அழகு சாதனங்கள்

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

இதோ எளிய நிவாரணம்! சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக போக்க இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்!

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உடனடியாக சரும பிரச்சனை தீரனுமா? இன்ஸ்டன்ட் பலனை தரும் இந்த குறிப்புகள் ட்ரை பண்ணுங்க.

nathan

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

nathan

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan