பிரபல பாலிவுட் நடிகர்கள் வசிக்கும் உயர் பாதுகாப்புப் பகுதியான பாந்த்ராவில் பிரபல நடிகர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மும்பை திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை திரைப்படத் துறை இன்னும் பாதாள உலக முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதா? நள்ளிரவில் சைஃப் அலி கானுக்கு என்ன நடந்தது?
பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சைஃப் அலிகான். சைஃப் 1993 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார், அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, பெரும் புகழைப் பெற்றார். ‘விக்ரம் வேதா’, ‘ரேஸ்’, ‘தேவரா’, ‘ஆதிபுருஷ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு, சைஃப் அலிகானும், நடிகை கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சயீஃப் அலி கான் தனது குடும்பத்துடன் மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறார். அதிகாலை 2:30 மணியளவில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்தார்.