27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
pMpEmyd6c4
Other News

கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கரு-க்கலைப்பு

கர்ப்பிணி பெண்ணின் பாலினத்தை ஸ்கேன் மூலம் உறுதி செய்து கருக்கலைப்பு செய்த பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேனிங் மையங்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சில கர்ப்பிணிப் பெண்களின் பாலினத்தை இடைத்தரகர்கள் மூலம் முறைகேடாக கண்டறிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை ஒட்டியுள்ள கொசமேடு எம்.எஸ்.நகரைச் சேர்ந்த உமலானி என்பவர், பெண் என தெரிந்த கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்வதையும் மருத்துவக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, கடந்த 8ம் தேதி, பால்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வா தலைமையிலான மருத்துவக் குழுவினர், கோசமேட்டில் உள்ள உமாராணியின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணையில் உமாராணி மருத்துவப் பயிற்சியின்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும், கருக்கலைப்புக்கு தலா 25,000 ரூபாய் சம்பளம் வாங்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள உமாராணியை, ஓசூர் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இது ரொம்ப தவறு Kamal Sir..! – Unfair Eviction…! – விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே

nathan

கழுத்தில் குத்திய டாட்டூ -கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

nathan

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை…

nathan

டிரைவருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த சண்டை.. வைரல் வீடியோ!

nathan

பிரசவ வலி அறிகுறிகள் – delivery pain symptoms in tamil

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

கள்ளக்காதல் மோகம்…தவிக்கும் குழந்தைகள்!

nathan

மாதம் 1 கோடி சம்பாதித்த 12 வயது ‘பொம்மை நாயகி’யின் கதை!

nathan

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய அருண் பாண்டியன்

nathan