27.2 C
Chennai
Saturday, May 31, 2025
DSCN3018
சைவம்

புதினா சாதம்

தேவையானப்பொருட்கள்:

அரிசி – 2 கப்
தேங்காய் பால் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

புதினா இலை – 2 கப்
கொத்துமல்லி இலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
இஞ்சி – 1″ துண்டு
பூண்டு பற்கள் – 2

தாளிக்க:

எண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 2
முழு ஏலக்காய் – 2
பட்டை இலை – சிறு துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
DSCN3018

Related posts

ரவா பொங்கல்

nathan

வெஜ் பிரியாணி

nathan

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan

சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படி

nathan

சுவையான காளான் டிக்கா செய்முறை…!

nathan

கோவைக்காய் அவியல்

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan