33.5 C
Chennai
Wednesday, Jun 11, 2025
ht2593
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சரும அலர்ஜியை போக்க வழிகள்

பெண்கள் சிலருக்கு நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம் தான்.

மேலும் தலையில் உள்ள பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது இந்தக் காரணங்களால் கூட நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

* ரோஜா இதழ்களை நன்கு அரைத்து அதனுடன் அதே அளவு சந்தனம் சேர்த்துக் நன்கு குழைக்க வேண்டும். அதை பொரி இருக்கும் இடங்களில் போட்டு, இருபது நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.   ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வந்தால் பொரிகள் படிப்படியாக மறையத் தொடங்கும்.

* கசகசா – 2 டீஸ்பூன், கருந்துளசி இலை, 10 இவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெட்டிவேரை கொதிநீரில் போட்டு வையுங்கள்.   மெல்லிய வெள்ளை துணியை “ஜில்” தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை “பத்து” போல் போடுங்கள்.

15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, “பொரிகளை” அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும் தன்மை கொண்டது.

மேலும் துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

 

ht2593

Related posts

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

nathan

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

nathan

சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

nathan

கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்..

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..

sangika

சுரைக்காய் பருப்பு குழம்பு

nathan

பெண்களே தெருந்துகொள்ளுங்கள்! அழகைப் பராமரிக்கும் போது தேனை சேர்ப்பதற்கான 15 வழிகள்!!!

nathan