27.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
how to control the hair l
தலைமுடி சிகிச்சை

இதோ எளிய நிவாரணம்! முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை தூண்டும் அற்புதமான பொடி!!!!

கரிசலாங்கண்ணி பொடி பற்றி நிச்சயமாக கேள்விபட்டு இருப்பீர்கள். தலைமுடிக்கு ஏகப்பட்ட நன்மைகளை தரக்கூடியது இந்த கரிசலாங்கண்ணி. தலைமுடி வளர்ச்சியை தூண்டி நரை முடி ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. பல அற்புதமான மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு செடி கரிசலாங்கண்ணி. இது இந்தியாவில் தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பிரபலமான ஒரு செடி.

இந்தியாவில் இரண்டு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் கிடைக்கிறது. ஒன்று மஞ்சள் நிற பூக்களை தரக்கூடியது மற்றொன்று வெள்ளை நிற பூக்களோடு இருக்கும். தலைமுடி வளர்ச்சிக்கு இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கரிசலாங்கண்ணியால் நம் தலைமுடிக்கு ஏற்படும் நன்மைகளை இப்போது காணலாம்.

◆இளநரையை தடுப்பதில் கரிசலாங்கண்ணி பெரிய பங்கு வகிக்கிறது. நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்றும் தன்மை இதற்கு உண்டு. இதனை ஹேர் பேக்காகவோ அல்லது ஹேர் மாஸ்காகவோ பயன்படுத்தி வரலாம்.

◆உங்களுக்கு பொடுகு தொல்லை இருக்கும் பட்சத்தில் இந்த கரிசலாங்கண்ணி பொடியை பயன்படுத்தி வந்தால் பொடுகு விரைவில் சரியாகும். பொடுகு தொல்லை நீங்க கரிசலாங்கண்ணி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து பயன்படுத்தி வாருங்கள்.

◆ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை கொண்ட கரிசலாங்கண்ணி பொடி தலைமுடி வேர்க்கால்களில் ஏற்படும் தொற்றுகளை விரைவில் சரியாக்க கூடியது. வேர்க்கால்களில் உண்டாகும் அரிப்பு, சொரியாசிஸ் போன்றவைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

◆கரிசலாங்கண்ணி பொடியை ஹேர் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் தலைமுடி வேர்க்கால்களை வலுவடைய செய்து முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தும். உங்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்தால் கரிசலாங்கண்ணி பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

◆முடி வெடிப்பு மற்றும் வறண்ட முடிக்கு கரிசலாங்கண்ணி பொடி ஒரு சிறந்த கன்டிஷனராக அமைகிறது. தொடர்ந்து இந்த பொடியை முடிக்கு பயன்படுத்தி வரும்போது உங்கள் முடி மிகவும் மென்மையாக மாறி முடி வெடிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.

◆சொட்டை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்ய கரிசலாங்கண்ணி பொடியை பயன்படுத்துங்கள். ஆண்கள் மட்டும் அன்றி ஒரு சில பெண்களுக்கு முடியை ஏற்றி சீவுவதால் முன்புறத்தில் சொட்டை விழுந்திருக்கும். இதனை தடுக்க கரிசலாங்கண்ணி இலை அல்லது பொடியை பயன்படுத்தி வாருங்கள்.

◆முன்பு கூறியது போல தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. நல்ல பலன் கிடைக்க கரிசலாங்கண்ணி ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்.

Related posts

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

அவசியம் படிக்க.. உங்க முடி உங்களை பற்றி சொல்கின்ற சுவாரசிய தகவல்கள் பற்றி தெரியுமா…?

nathan

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

உருளைக்கிழங்கு தோலை கொண்டு புதிய முடிகளை வளர செய்யும் டிரிக்ஸ்!

nathan

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan

பெண்களே நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப சீகைக்காய் யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிடுவதால் நிகழும் அற்புதம்!

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

nathan