Other News

12 மனைவிகள்,102 குழந்தைகள், – பெத்துக்கமாட்டாராம்

12 மனைவிகள், 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக்குழந்தைகளுடன் ஒரு மனிதன்.

உகாண்டாவைச் சேர்ந்த மூசா ஹசயா, இனி குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

மூசா ஹசயா உகாண்டாவில் உள்ள புகிசா, ருகாசாவில் வசிக்கிறார். 67 வயதான மூசா ஹசயாவுக்கு 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரக்குழந்தைகள் மற்றும் பேத்திகள் உள்ளனர். அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்கின்றனர்

1971 ஆம் ஆண்டில், ஹசயமுசா பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி 16 வயதில் முதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து, முதல் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, மூசா 11 முறை திருமணம் செய்து கொண்டார்.

உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக உள்ளது. இவ்வாறு, மூசாவின் ஒவ்வொரு மனைவிக்கும் சுமார் 8-10 குழந்தைகள் இருந்தனர். மூசாவின் கடைசி மனைவிக்கு 21 வயது. அவள் பெயர் ஜூலிகா.

மூசாவின் மூத்த மகனுக்கு 51 வயது. இளைய மகனுக்கு 6 வயது. அவரது மூத்த மகன் மூசாவின் கடைசி மனைவி யூரிகாவை விட 31 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.musa1

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சமீப வருடங்களாக மூசாவின் வருமானம் தேக்கமடைந்ததால், அவரது இரு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

இருப்பினும், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது, மேலும் செலவை சமாளிக்க முடியாமல் மேலும் குழந்தைகளைப் பெறுவதை நிறுத்துவதாக மூசா கூறுகிறார்.
இது குறித்து சயமுசா கூறுகையில், “வாழ்க்கை செலவு அதிகரித்து, வருமானம் குறைந்துள்ளது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகிறேன். அதனால், 12 மனைவிகளுக்கும் வாய்வழி கருத்தடை மருந்து வைத்தேன். இனி குழந்தைகள் வேண்டாம். வேண்டாம் என முடிவு செய்தேன்.

 

நான்கு முறைக்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு போதிய சொத்துக்கள் இல்லாவிட்டால் திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்.எனக்கு 568 பேரக்குழந்தைகள் மற்றும் 102 குழந்தைகள் உள்ளனர். எல்லோருடைய பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை.

 

ஏராளமான நிலமும், நல்ல வருமானமும் இருந்ததால், அதிகமான பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். நான் என் குடும்பத்தை வளர்க்க விரும்பினேன். எனது முழு குடும்பத்துக்கும் நிலத்தைக் கொடுத்து விவசாயம் செய்யச் சொன்னேன். அதன் மூலம் அவர்கள் தங்கள் உணவை இறுதிவரை பெற முடியும். தற்போது எனது குழந்தைகளை படிக்க வைப்பதில் சிக்கல் உள்ளதால், அரசின் உதவியை நாடினேன். musa2

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button