ஆரோக்கிய உணவு

மொறு மொறு பால்கோவா மோதகம்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – ¼ கப்

ரவை – ¼ கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன் (மாவு பிசைவதற்கு)

உப்பு – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

பால்கோவா – 1 கப் (இனிப்பு சேர்த்தது)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். பிசைந்த மாவின் மீது சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

பின்பு மீண்டும் ஒருமுறை மாவைப் பிசைய வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும்.

அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார்செய்து வைத்திருக்கும் மோதகங்களைப் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இந்த மோதகம், ஒரு வாரம் வரை மொறு, மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button