எல்லைப் பகுதிகளில் அதன் ஒட்டுமொத்த கண்காணிப்பு மற்றும் போர் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் அவசரகால ஜெட்பேக் உடைகளை வாங்கத் தொடங்கியதை அடுத்து, செவ்வாய்கிழமை ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் சாதனத்தின் செயல்விளக்கம் நடைபெற்றது. கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங் திங்களன்று ஆக்ராவில் நீர், கட்டிடங்கள் மற்றும் வயல்களில் ஜெட்பேக்கின் செயல்திறனை நிரூபித்தார்.
ஜெட்பேக் சூட் என்பது அணிந்திருப்பவரை பறக்க அனுமதிக்கும் ஒரு சாதனம். இதற்கு வாயுக்கள் அல்லது திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதே நேரத்தில், வீரர்கள் வேகமாக செல்ல உதவுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் (ஏஏடிஎஸ்) நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இந்திய ராணுவம் ஜனவரியில் 48 ஜெட்பேக் சூட்களை வாங்குவதாக அறிவித்தது. 80 கிலோ எடையுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இது பாலைவனங்கள், மலைகள் மற்றும் 3000மீ உயரம் வரை இயங்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் திங்கள்கிழமை கிராவிட்டி தலைவர் ரிச்சர்ட் பிரவுனிங் நடத்தினார். இந்திய எல்லையில் பதற்றத்தை தவிர்க்கவும், அவசர ராணுவ போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இது பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Yesterday, Richard Browning the founder of #Gravity Industries gave a demo of their #Jetpack system to the Indian Army in #Agra.
The #IndianArmy has issued the requirement to procure 48 such systems.#IADN pic.twitter.com/0dcEW3hjyb
— Indian Aerospace Defence News (IADN) (@NewsIADN) February 28, 2023