தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இயக்குனர் சசியின் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார்.
மலேசியா மற்றும் லங்காவியில் படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி பைக் போட்டை விபத்துக்குள்ளானார். முகத்திலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு, பற்கள் உடைந்து, பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். படக்குழுவினர் அவரை சிகிச்சைக்காக லங்காவியலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி, பின்னர் தான் நலமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கன்னம் மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயங்களிலிருந்து நான் வெற்றிகரமாக மீட்கப்பட்டேன். நான் இப்போது பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். கூடிய விரைவில் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் எனது உடல்நிலையில் அக்கறை காட்டியதற்கும் நன்றி. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
Dear friends, I am safely recovered from a severe jaw and nose injury during Pichaikkaran 2 shoot in Malaysia.
I just completed a major surgery.
I will talk to you all as soon as possible😊✋
Thank you for all your support and concern for my health🙏❤️ pic.twitter.com/YJm24omxrS— vijayantony (@vijayantony) January 24, 2023