குடிபோதையில் பொள்ளாச்சி வடுக பாளையம் உரிமையாளர் கடையை அடித்து உடைத்த அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் குமார்.
லிங்கதுரை திமுகவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது தம்பி மகாராஜா அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., பிரமுகர்களுக்கும், அதே பகுதியில் உள்ள லிங்கதுரை, மகாராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திமுக நிர்வாகி லிங்கதுரை கையில் திமுக கொடியுடன் தனது
தம்பி மகாராஜா இருவரும் அவர்களது சொந்த மளிகைகடையில் பாட்டில்களை அடித்து
நொறுக்கியதுடன் கடையில் உள்ள பாட்டில்களை எடுத்து சாலையில் வீசினார்கள்.
பாட்டில்களை வீசிவிட்டு இருவரும் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு காரில் வந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தி.மு.க., பிரமுகர் லிங்கதுரை, தி.மு.க., கட்சி கொடியை வைத்து, கடையை அடித்து நொறுக்கி, பொதுமக்களை மிரட்டிய சம்பவம், பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோதும் லிங்கதுரையும், மகாராஜாவும் தகராறு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.