27.7 C
Chennai
Sunday, Jul 20, 2025
ht43887
பெண்கள் மருத்துவம்

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடுவதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்aல… இரவில் அவர்களை தூங்க வைப்பதும். இதுபோல வாண்டு களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோருக்காகவே வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆங்கிலப் புத்தகம்!

கார்ல் ஜோஹன் ஃபார்ஸன் எர்லின் என்ற நீளமான பெயருக்குச் சொந்தக்காரர்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
ஸ்வீடனைச் சேர்ந்த இவரது பெயரைப் போலவே, A new way of getting children to sleep: The rabbits who want to fall asleep என புத்தகத்தின் பெயரும் நீளமானதே!

ரோஜர் என்ற முயல்குட்டியைத் தூங்க வைக்க முடியாமல் போராடும் அம்மா முயலுக்கு, ஓர் ஆந்தை சொல்லித் தரும் ஐடியாக்கள்தான் கதை! ‘ரேடியோ கேட்டும், கதைகள் கேட்டும் வளர்ந்த பையன்தான் நான். ஆமாம். நான் கொஞ்சம் பழைய தலைமுறை’ என்று சங்கோஜத்துடன் சொல்லும் கார்ல் ஜோஹன், ‘குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்க வையுங்கள்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தில் சொல்லும் முக்கிய ஆலோசனை. உளவியல் மருத்துவரான ரங்கராஜனிடம் இது பற்றிக் கேட்டோம்.

”கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகிறது. இதனால் தூக்கம் எளிதாக வருகிறது. பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமையும். நான் தனிநபர் இல்லை என்ற நம்பிக்கையும் குழந்தைக்கு ஏற்படும். கார்ல் ஜோஹன் சொல்வதைப் போல, நாமும் இரும்புக்கை மாயாவி முதல் விக்ரமாதித்தன் வரை பல கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள்தானே” என்கிறார் ரங்கராஜன்.
ht43887

Related posts

மாதவிலக்கு நாட்களில் தேநீர், கார உணவுகளை தவிர்ப்பது நல்லது

nathan

முப்பது பிளஸ்சில் முக்கியம்!

nathan

சிறு முயற்சி.,கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! பெரிய ஆரோக்கியம்..!!

nathan

மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க சில அருமையான வழிகள்

nathan

பெண்கள் இதை தினமும் சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்

nathan

மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.

nathan

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

nathan

கரு குழாயில் ஏன் பிரச்சினை ஏற்படுகிறது

nathan

குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

nathan